பூட்டான் மன்னருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

அண்டை நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் என்ற, மத்திய அரசின் கொள்கையின்படி, தெற்காசிய நாடான, பூட்டானுக்கு, தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார்,வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர்.

நம் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலரான, தமிழகத்தைச் சேர்ந்த, ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசில், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்டை நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையில், மத்திய அரசு உள்ளது. கடந்த, 2014ல், தான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோது, 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்து, நரேந்திர மோடி அசத்தினார்.

அதேபோல், தன் முதல் வெளிநாட்டு பயணமாக, தெற்காசிய நாடான, பூட்டானுக்கு சென்றார்.இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், தன் முதல் பயணமான, மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்கு செல்கிறார், நரேந்திர மோடி.

இந்த நிலையில், ஐ.எப்.எஸ்., எனப்படும், இந்திய வெளியுறவு சேவை துறையின் முன்னாள் அதிகாரியான, வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக, பூட்டானுக்கு சென்று உள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment