மினுவாங்கொடை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் 9 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மினுவாங்கொடையின் பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட உடைமைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நேற்றிரவு 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் 9 பேரையே எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment