பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடா வாசி சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது-66) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக இலங்கை திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று விட்டு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளானார்.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் காயமடைந்தார்.
இதனையடுத்து, பூநகரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment