ஐநாவுக்கு கால அவகாசமா தமிழ்க்கட்சிகள் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் ஒருமித்து எடுப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று யாழில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளன.

தமிழீழ விடுதலை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடல்  யாழ் பாடி விடுதியில் இன்று இடம்பெற்றது.

கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபீஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


எனினும்  இக்கூட்டத்தில் ரெலோ, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவைகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  கலந்து கொண்டு விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதே வேளை இக் கலந்துரையாடல் முடிவடையும் வரையில் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கலந்துரையாடலுக்கு வரவில்லை. 


கூட்டம் முடிவடைந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் வெளியேறிய பின்னர் கலந்துரையாடல் நடைபெற்ற இடத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு நின்றுருந்த ரெலோ அமைப்பின் செயலர் மற்றும் தவிசாளர் மற்றும் இளைஞரணிச் செயலர் ஆகியோருக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment