அதிரடி வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
 அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி   சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் நேற்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பெங்களூரைப்  பணிக்க, பெங்களூரு அணி  17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

71 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டாலும்  2 ஆவது விக்கெட்டுக்காக அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா நிதானமாக ஜோடி சேர்ந்தாடி வந்தனர்.

 சுரேஷ் ரய்னா 8.5 ஆவது ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற ஐ.பி.எல். அரங்களில் 5  ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரெய்னா.

எனினும் அவர் அடுத்த ஓவரில் அதிரடியாக ஆட முற்பட்டபோது மெய்ன் அலியினுடைய பந்து வீச்சில் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.  சென்னை அணியின் இரண்டாவது விக்கெட்டும் 40 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 11.5 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது.

 14.2 ஆவது ஓவரில் ராயுடு 28 ஓட்டத்துடன் மொஹமட் சிராஜ் உடைய பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜடேஜா களமிறங்கி  துடுப்பெடுத்தாட சென்னை அணி இறுதியாக 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து பெங்களூர் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் கேதர் யாதவ் 13 ஓட்டங்களையும், ஜடேஜா 6 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர். 


#Chennai_Super_Kings,  #IPL #Cricket, #Bengaluru
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment