சர்வதேச விசாரணைக்கு காரணம் மகிந்தவே - பொன்சேகா குற்றச்சாட்டு

போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின்எந்தவொரு நீதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்க  நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தமது சுயநல அரசியல் நோக்கத்துக்காகப் போர் செயற்பாடுகளை பயன்படுத்திக்கொண்டமையினாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கை வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் - என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment