விபத்தில் நால்வர் உயிரிழப்பு

கொழும்பு–புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வானில் பயணித்த 8 பேர் மற்றும் வீதியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் வானில் பயணித்த மூவரும் வீதியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment