நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

முதியோர் இல்ல சிற்றூழியர்களுக்கான நியமனக் கடிதங்கள்  இன்று வழங்கப்பட்டன.


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஆளுநரால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணத்தின் அரச முதியோர் இல்ல சிற்றூழியர்கள் நியமனமே வழங்கப்பட்டது.


நிகழ்வில் வட மாகாண பிரதம செயலர் பத்திநாதன், ஆளுநரின் செயலர் இளங்கோவன், வடமாகாண கல்வி,சுகாதாரம், விவசாயம், மகளிர் விவகாரம், உள்ளூராட்சி, அமைச்சின் செயலர்கள், வடக்கு மாகாண காணி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment