தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்-பிரிட்டன் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் கோரியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி இதனை வலியுறுத்தினார்.

எமது பார்வையில் 30/1 தீர்மானம், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

சகல  தரப்புகளினதும் ஒருங்கிணைந்த முயற்சியாக அதனை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை அரசுக்குத் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிப்போம் - என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment