ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று திருப்பதி மலைக்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது துணைவியார் மற்றும் அவருடன் சென்ற நாடாளமன்ற உறுப்பினர்கள் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்கள்.
கோவில் முன் வாசல் வழியாக சென்ற அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். தொடர்ந்து சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு மலையானை தரிசித்தவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கே தம்பதிக்கு வேத ஆசி வழங்கினர்.
#RanilWickramasinghe #Thirupathi #PoliticalNews #SrilankaPolitics #MahindaRajapaksa #MaithiripalaSirisena #TamilNewsKing
0 comments:
Post a Comment