மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 527 பேர் கைது !!!

மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், மருத்துவர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்டங்குகின்றர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்துவரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. 

களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment