100 ஆவது பட்டத்தை வென்றார் பெடரர்!




22 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 100 ஆவது பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார். 

ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி டுபாயில் நடந்து வந்தது. 
இதில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் 7 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 11 ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். 
இந்த போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 
டுபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெடரர் வெல்வது இது 8 ஆவது முறையாகும். 
அத்துடன் 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100 ஆவது சர்வதேச பட்டமாக அமைந்தது. 
இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 2 ஆவது வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றார். 
இந்த வகையில் அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment