போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் வைத்தியசாலையின் வைத்தியசேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தே தாதியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எந்தவிதமான முன்னறிவிப்பின்றி தாதியர்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பிரகடனம் செய்யப்பட்ட வைத்திய சேவையினை திடீரென பகிஸ்கரிப்பு செய்யப்பட்டமை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment