பாட்டியுடன் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

பாட்டியுடன் நினைவஞ்சலிக்குச் சென்ற சிறுவன் ஒருவன் இன்று காலை கிணற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிவானந்தம் தரூன் என்ற ஆறு வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம்  வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிராமத்தையே சோகமாக மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து  சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு  90 ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காகச்  குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் சென்றிருந்ததார். 

அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனைக் காணவில்லை என நீண்ட நேரமாகத் தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து  குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

 குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான கிணற்றில் பிள்ளை எவ்வாறு வீழ்ந்திருக்கக் கூடும். இது கொலையா? அல்லது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment