கிண்ணம் வென்றது சங்கானை பிரதேச செயலக அணி

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியின் ஹொக்கித் தொடரில் சங்கானை பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.


யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிடிலிப்பாய் பிரதேச செயலகம்  மோதியது.

நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரு அணியும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாமையால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மாானிக்க சமநிலை தகர்ப்பு உதை வழங்ககப்பட்டது. 3:2 என்ற கோல் கணக்கில் சங்கானை பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment