பணம் கொள்ளையிட்டவர் கைக் குண்டுடன் கைது

குருநாகல் பகுதியில் தனியார் வங்கி ஒன்றுக்கு  சென்று வந்த ஒருவரின் பணத்தைக்  கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து,  கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வங்கியில் காசோலை ஒன்றை மாற்றி பணம் பெற்றுக் கொண்ட நபர் ஒருவரின் பணத்தையே சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார்.

43 வயதுடைய குறித்த நபர் துல்கிரிய - தான்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment