ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறு பகுதியிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.

மட்டக்களப்பு ஆயித்தியமலை,  மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த நிலையில் கந்தக்குட்டி நவரெட்ணம் (வயதுரு-49) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டியுள்ள கடையொன்றிலிருந்து அரசமணி தனுஷியன் (வயது-25) என்ற இளைஞனது சடலமொன்றும்  மீட்கப்பட்டது.

சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் மற்றும் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment