இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியீட்டியது புனே சிட்டி.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று இரவு 5ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 67ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணி புனே சிட்டியை எதிர்கொண்டது.
பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட்டுகள் அடிப்பதிலும் இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் போல் செயல்பட்டன.
முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லையாகிலும். பிற்பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது.
55 ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் சி.கே.வினீத் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போட்டார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
புனே அணியின் நட்சத்திர வீரர் மார்செலோ பெரீரா 59 மற்றும் 60 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆட்டத்தை சமனிலைக்குக் கொண்டு வர சென்னை அணி கடைசி வரை போராடியும் பலன் எதுவும் இல்லை.
முடிவில் புனே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை கைப்பற்றியது.
ஐ.எஸ்.எல். வரலாற்றில் 10 ஆவது முறையாக சென்னையுடன் மோதி இருக்கும் புனே அணி அதில் பெற்ற முதல் வெற்றி இது தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடிமேல் அடிவாங்கி வரும் சென்னை அணி 14 தொடரில் விளையாடியது.
அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் சமநிலை பெற்றது., மிகுதி 11 போட்டிகளில் தோல்வி என்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடருகிறது. சென்னை அணி
இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-ஜாம்ஷெட்பூர் அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.
0 comments:
Post a Comment