துப்பாக்கி பிரயோகம் இருவர் கைது

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிடியாகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதடைய நபர் மீது கடந்த 05 ஆம் திகதி துப்பாக்கி  சூடு ஏற்பட்டு,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 ரி 56 ரக துப்பாக்கியைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த போது துப்பாக்கி தன்னிச்சையாக செயற்பட்டதாக மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்த நபர் மற்றும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்  பொலிஸாரால் கைதானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment