கஞ்சா கடத்தியவர் ஊர்காவற்துறையில் கைது

உந்துருளியில் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஊர்காவற்துறை - புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா  கடத்த பயன்படுத்தப்பட்ட உந்துருளி மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment