ஜானக பெரேரா கொலை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!



மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட பல பேர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமான வழக்கு இன்று அநுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் பிரதான சந்தேகநபரான உமர் ஹப்தாப் என்பவரை அன்றைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் அநுராதபுரத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் 06ம் திகதி இடம்பெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த வழக்கின் சாட்சியாளர்களாக 152 பேர் சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டுள்ளனர்.


Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment