150 மில்லியன் டொலர்களுக்கு சொந்தமான பூனை!


ஜெர்மனை சேர்ந்த நபர் ஒருவர் தான் வளர்த்த  பூனையின் பெயரில் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற்கு காப்பாளர்களையும் நியமித்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 85 வயதான கார்ல் லாகர்ஃபீல்ட் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 
குறித்த நபர் உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர் சௌபெட் (Choupette ) என்ற பூனையை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சௌபெட்டை பராமரிக்க வேலைக்காரர்களும் உள்ளனர். அந்த அளவிற்கு சௌபெட் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தது.
 கார்ல் லாகர்ஃபீல்ட் எந்நேரமும் தன் பூனையுடனேயே சுற்றித்திரிவார். சட்டம் சம்மதித்தால் தனது பூனையை திருமணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், அவர் மறைவிற்கு முன்னர் தனது பூனையின் பெயரில் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற்கு காப்பாளர்களையும் நியமித்துவிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment