கனடாவின் வடக்கு அல்பேர்டா பகுதியில் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.
இன்று மாலை அல்லது இரவு இந்த பனிப்புயல் வீசக்கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -23 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக அநாவசிய பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment